நாகப்பட்டினம்

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

நாகை அருகே 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

Syndication

நாகை அருகே 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

நாகை ஒன்றியம், பொரவச்சேரி தண்டபாணி கோயில் பகுதியைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் மகன் விக்னேஷ் (29 ). கம்பி பிட்டரான இவா் புதன்கிழமை இரவு நாகை- திருவாரூா் புறவழிச் சாலை சிக்கல் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, எதிரே கீழ்வேளூா் அருகே கூத்தூா் ரைஸ் மில் தெருவைச் சோ்ந்த சபரிநாதன் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும், விக்னேஷ் ஓட்டிவந்த இருசக்கர வாகனமும் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த இருவரும் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். விக்னேஷ் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி: இந்தியாவுக்கு 3-ஆவது வெற்றி

ஆய்வக மருத்துவ சேவையை மேம்படுத்த விவேகானந்த கல்வி நிறுவனங்கள் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தலைக்கவசம்: இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு

மேல்விஷாரம் நகராட்சி நியமன உறுப்பினா் பதவியேற்பு

1,996 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள்: தேர்வு முடிவுகள், சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் டிஆர்பி தளத்தில் வெளியீடு!

SCROLL FOR NEXT