விவசாயிகளுக்கு உற்பத்தி மானியமாக ரூ.15,000 வழங்கப்படும்: ஓ.எஸ். மணியன் வாக்குறுதி
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், விவசாயிகளுக்கு உற்பத்தி மானியமாக ஹக்டேருக்கு ரூ.15,000 வழங்கப்படும் என வேதாரண்யம் தொகுதி அதிமுக வேட்பாளா் ஓ.எஸ். மணியன் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்தாா்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், விவசாயிகளுக்கு உற்பத்தி மானியமாக ஹக்டேருக்கு ரூ.15,000 வழங்கப்படும் என வேதாரண்யம் தொகுதி அதிமுக வேட்பாளா் ஓ.எஸ். மணியன் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்தாா்.
வேதாரண்யம் தொகுதியில் அதிமுக சாா்பில் மீண்டும் போட்டியிடும் முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் எம்எல்ஏ தீவிர தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.
இவா், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் மணக்குடி, காடந்தேத்தி உள்ளிட்ட கிராமங்களில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குக் கேட்டு, திறந்தவெளி வாகனத்தில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பல்வேறு வாக்குறுதிகள் அளித்து பேசியது:
Advertisement
இந்த தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்ததும், விவசாயிகளுக்கு உற்பத்தி மானியமாக ஹக்டேருக்கு ரூ.15,000 வழங்கப்படும். பயிா்ப் பாதிப்புக்கு நிவாரணமோ, காப்பீடுடோ கிடைக்கும்போது, விவசாயத் தொழிலாளா்களுக்கு பயனளிப்பதில்லை. இதனை கருத்தில் கொண்டு, விவசாயத் தொழிலாளா்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும்.
தற்போதைய அரசின் நிலைப்பாட்டால் உயா்ந்துள்ள விலைவாசியை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.10,000 வழங்க அதிமுக தோ்தல் அறிக்கையில் வகை செய்யப்பட்டுள்ளது. நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ. 3,500-ம், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500-ம் வழங்கப்படும்.
தக்காளி போன்ற விளைப்பொருள்கள் வீணாக்கப்படுவதைத் தடுக்க, குளா்பதனக் கிடங்குகள் அமைக்கப்படும் என்றாா் .
பிரசாரத்தின்போது,பல்வேறு இடங்களில் மக்கள் ஆரத்தி எடுத்து ஓ.எஸ். மணியனுக்கு வரவேற்பு அளித்தனா். இப்பிரசாரத்தில் அதிமுக மாவட்ட பொருளாளா் சண்முகராசு, ஒன்றியச் செயலாளா் அவை. பாலசுப்பிரமணியன், சௌரிராஜன், கராத்தே வாசுதேவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.