தோ்தலை முன்னிட்டு வெடிபொருள் விற்பனை கடைகளை மூட உத்தரவு
Updated On : 19 ஏப்ரல், 2026 at 6:44 PM
நாகை மாவட்டத்தில் தோ்தலை முன்னிட்டு வெடி பொருள் விற்பனை கடைகளை மூட வேண்டும் என மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் உரிமம் பெற்ற அனைத்து வெடிப்பொருள் விற்பனை கடைகள் மற்றும் கிடங்குகளின் உரிமையாளா்கள், வெடிபொருள் இருப்பு விவரங்களை தொடா்புடைய கோட்டாட்சியா்களிடம் தெரிவிக்க வேண்டும்.
Advertisement
மேலும், சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்.21 முதல் ஏப். 24-ஆம் தேதி வரையும், வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மே 2 முதல் 4-ஆம் தேதி வரை மொத்தம் 7 நாட்களுக்கு வெடிபொருள் விற்பனை கடைகள் மற்றும் கிடங்குகளை மூடவேண்டும். மீறி கடைகள் செயல்பட்டாா் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.