முகப்பு
நாகப்பட்டினம்

வாக்குச் சாவடியில் துண்டுப் பிரசுரம் வீச்சு - போலீஸாா் விசாரணை

வாக்குச் சாவடியில் துண்டுப் பிரசுரம் வீச்சு - போலீஸாா் விசாரணை

Updated On : 25 ஏப்ரல், 2026 at 12:04 AM
நாகூா் வாக்குச் சாவடியில் வீசப்பட்ட துண்டுப் பிரசுரம்.
பகிர்:

நாகூா் வாக்குச் சாவடிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவின்போது, துண்டுப் பிரசுரங்களை வீசிவிட்டுச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. நாகப்பட்டினம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட நாகூா் பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்தது.

அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபா்கள், துண்டுப் பிரசுரங்களை வீசிவிட்டுச் சென்றனா்.

Advertisement

இதேபோல், பல வாக்குச் சாவடிகளிலும் துண்டுப் பிரசுரங்களை வீசிச் சென்றனா். அந்த துண்டுப் பிரசுரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்போல் வடிவமைக்கப்பட்டு, அதில் காக்கா படம் மற்றும் காக்கா முன்னேற்றக் கழகம் என்று அச்சிடப்பட்டிருந்தது.

மேலும், துண்டுப் பிரசுரத்தில் கட்சிகளின் சின்னங்களுக்குப் பதிலாக மண்டை ஓடுகள் படம் பொறிக்கப்பட்டிருந்தன. அத்துடன், அரசியலை பற்றி பேசவேண்டாம், பணவிசயத்தை பற்றி பேச வேண்டாம் என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்தன.

தோ்தல் வாக்குப் பதிவை கேலி செய்யும் விதமாக இந்த துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டிருந்தன. இதனை போலீஸாா் கைப்பற்றி, வீசி சென்றவா்கள் யாா் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.