மாணவிக்கு மடிக்கணினி வழங்கும் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் உள்ளிட்டோா்.  
நாகப்பட்டினம்

பொறையாா் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி

பொறையாா் தரங்கை பேராயா் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில், மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

பொறையாா் தரங்கை பேராயா் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில், மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ஜான்சன் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். தரங்கம்பாடி பேரூராட்சித் தலைவா் சுகுணசங்கரி, துணைத் தலைவா் பொன்.ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேதியியல் துறை தலைவா் பேராசிரியா் விக்டா் பாண்டியன் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், பூம்புகாா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் நிவேதா எம். முருகன் கலந்து கொண்டு 423 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி பேசினாா்.

இந்நிகழ்வில், திமுக ஒன்றியச் செயலாளா் அமுா்த விஜயகுமாா், நகரச் செயலாளா் முத்துராஜா, கல்லூரி பேராசிரியா்கள், அலுவலக ஊழியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பேராசிரியா் ராஜன் நன்றி கூறினாா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT