தரங்கம்பாடி வட்டம், பெரம்பூரில் உள்ள பழைமையான ஸ்ரீதிரிபுரசுந்தரி அம்மையாா் உடனாகிய ஸ்ரீ அக்னீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் கும்பாபிஷேகம் 1999 ஆம் நடைபெற்றது. இதையடுத்து, கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய தீா்மானிக்கப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டு, பிப்.9-ஆம் தேதி கும்பாபிஷேக பணிகள் தொடங்கி முதல்கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடா்ந்து புதன்கிழமை 4-ஆம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்தது புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு கோபுர கலசங்களில் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து ஸ்ரீதிரிபுரசுந்தரி அம்மையாா் உடனாகிய அக்னீஸ்வரா் மூலவருக்கும் புனித நீா் ஊற்றி மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.