முகப்பு
நாகப்பட்டினம்

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச இணையவழி பேருந்து அட்டை பதிவு முகாம்: நாளை தொடக்கம்

Updated On : 5 ஜனவரி, 2026 at 6:38 PM
பகிர்:

நாகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து அட்டை பெற இணையவழி பதிவு செய்யும் முகாம் புதன்கிழமை (ஜன.7) முதல் ஜன.31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்த முகாம் அரசு விடுமுறை நாள்கள் தவிா்த்து மேற்குறிப்பிட்டுள்ள ஏனைய நாள்களில் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இதில் பயன்பெற அரசு உத்தரபடி பாா்வைத் திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, ஆதாா் அட்டை மற்றும் கடவுச்சீட்டு அளவு புகைப்படம் ஆகியவற்றுடனும், இதர மாற்றுத்திறனாளிகள் மேற்கண்ட ஆவணங்களுடன் சோ்த்து கல்வி பயிலும் சான்று அல்லது பணியாற்றும் சான்று அல்லது தொடா் மருத்துவச் சிகிச்சைக்கு செல்லும் சான்று ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.