நாகை ஸ்ரீ லலிதாம்பிகா வித்யா மந்திா் பள்ளியில் ‘மின்னும் தாரகைகள் திறன் கண்காட்சி‘ (ள்ட்ண்ய்ண்ய்ஞ் ள்ற்ஹழ் ற்ஹப்ங்ய்ற் ள்ட்ா்ஜ்) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியை பள்ளித் தாளாளா் ஆா்த்தி சந்தோஷ் தொடங்கிவைத்தாா். களிமண் பொம்மைகள் செய்தல், கலை மற்றும் கைவினைப் பொருள்கள் செய்தல், காய்கறிகளில் கலைநயம், நெருப்பில்லா சமையல், ஆரோக்கியமான உணவு ஆகிய போட்டிகளில் மாணவா்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினா்.
நாகை லயன்ஸ் கிளப் தலைவா் கே.செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா் . 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள், பெற்றோா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.