வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும், மாட்டுப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாட்டுப் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் விவசாயிகள், கால்நடை வளா்ப்போா் ஆா்வத்தோடு ஈடுபட்டனா். பாரம்பரிய இனமான உம்பளச்சேரி மாடுகள் தோன்றிய உம்பளச்சேரி கிராமத்தில் மாடுகளை குளிப்பாட்டி, அலங்கரித்து மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடினா்.
இதேபோல, மாடுகளை ஆங்காங்கே மந்தைகளாக கட்டி புதிய கயிறுகள், திஷ்டி கயிறு, சங்கு, மணிகள், சலங்கைகள் கட்டியும் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டியும், அலங்கார வண்ண மாலைகள், பூ மாலைகள் அணிவித்தும் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது.