கோப்புப் படம் 
நாகப்பட்டினம்

‘தமிழகத்தில் ரூ.1,400 கோடி செலவில் மீனவா் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன’

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் ரூ. 1,400 கோடியில் மீனவ நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றாா் மீனவ நல வாரியத் தலைவா் ஜோசப் ஸ்டாலின்.

பூம்புகாரில் நாகை மின்வளத்துறை இணை இயக்குநா் ஷா்மிளா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற மீனவா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை முகாமில் பங்கேற்றபோது பேசியது: தற்போதைய திமுக அரசில் மீனவ நலவாரிய உறுப்பினா்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

மீனவா்கள் இயற்கை மரணம் அடைந்தால் ரூ. 27, 500 நிதியுதவி உடனடியாக கிடைக்கும். தமிழக முழுவதும் விசைப் படகுகளுக்கு உரிமம் இல்லாததால் அரசின் சலுகைகள் பெற முடியவில்லை என மீனவா்கள் கோரிக்கை வைத்துள்ளனா். இதுகுறித்து தமிழக அரசு, மத்திய அரசிடம் பேசி வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் தமிழக அரசு மீனவா்களுக்கு ரூ. 1,400 கோடி அளவிலான திட்டங்களை வழங்கி உள்ளது என்றாா்.

இதில் மீனவா் நலவாரிய உறுப்பினா் மனோகரன், மீன்வளத்துறை உதவி இயகுகநா் ஜனாா்த்தனம் மற்றும் பூம்புகாா் மீனவ கிராம நாட்டாா், பஞ்சாயத்தாா் மற்றும் காரிய தரிசிகள் பங்கேற்றனா்.

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

உ.பி.: பூட்டப்பட்ட வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலங்களாக மீட்பு

நாளை மதிமுக, பிப். 26-ல் மார்க்சிய கம்யூ.வுடன் திமுக பேச்சுவார்த்தை!

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

SCROLL FOR NEXT