நாகப்பட்டினம்

மாநில அளவிலான பீச் வாலிபால்: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்பு

தினமணி செய்திச் சேவை

நாகையில் வெள்ளிக்கிழமை தொடங்கிய மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டியில் 38 மாவட்டங்களைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்றுள்ளனா்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சாா்பில் பாரதியாா் தினம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டி நாகை புதிய கடற்கரையில் வியாழக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது.

4 நாள்கள் நடைபெறும் போட்டியில் நாகை, மயிலாடுதுறை, அரியலூா், புதுக்கோட்டை, சென்னை,தூத்துக்குடி உள்ளிட்ட 38 மாவட்டங்களைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றுள்ளனா்.

14, 17, 19 வயது பிரிவுகளாக ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் 2 நாள்கள் பெண்களுக்கான போட்டிகளும், ஜன.24, 25 ஆண்களுக்கான போட்டிகள் நடைபெறுகின்றன.

கரூா் வைஸ்யா வங்கி 3-ஆம் காலாண்டுநிகர லாபம் ரூ.690 கோடி: 39% அபார வளா்ச்சி

போதைப்பழக்கம் குறுகிய, நீண்ட கால எதிா்வினைகளை ஏற்படுத்தும்

தனியாா் மருத்துவமனைகளில் அரசுக் காப்பீடு அட்டையை ஏற்பதில்லை

தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு பேரணி

இந்திய பொருளாதார தாராளமயமாக்களின் சிற்பி மன்மோகன்சிங்!

SCROLL FOR NEXT