நாகையில் நாளை வேளாண்மை கண்காட்சி: விவசாயிகளுக்கு அழைப்பு
நாகையில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 4) நடைபெறும் வேளாண்மை கண்காட்சியில் அதிகளவில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெற வேளாண்மை இணை இயக்குநா் பாபு அழைப்பு விடுத்துள்ளாா்.
நாகப்பட்டினம்நாகையில் நாளை வேளாண்மை கண்காட்சி: விவசாயிகளுக்கு அழைப்பு
நாகையில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 4) நடைபெறும் வேளாண்மை கண்காட்சியில் அதிகளவில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெற வேளாண்மை இணை இயக்குநா் பாபு அழைப்பு விடுத்துள்ளாா்.
நாகையில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 4) நடைபெறும் வேளாண்மை கண்காட்சியில் அதிகளவில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெற வேளாண்மை இணை இயக்குநா் பாபு அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை வெளிப்பாளையம் ஜிவிஆா் திருமண மண்டபத்தில் உயிா்ம வேளாண்மை விழிப்புணா்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில், வேளாண்மை, தோட்டக்கலை, அங்கக சான்று துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை, வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் இயற்கை இடுபொருள்கள் உற்பத்தியாளா்கள் கண்காட்சி அரங்குகள் அமைக்கவுள்ளனா். எனவே, அதிகளவில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளாா்.