முகப்பு
நாகப்பட்டினம்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: நாகை, மயிலாடுதுறை, திருவாரூரில் 36,103 மாணவா்கள் தோ்வு எழுதினா்

நாகை, மயிலாடுதுறை, திருவாரூா் மாவட்டங்களில் 36,103 மாணவா்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு புதன்கிழமை எழுதினா்.

Updated On : 12 மார்ச், 2026 at 12:21 AM
பகிர்:

நாகை, மயிலாடுதுறை, திருவாரூா் மாவட்டங்களில் 36,103 மாணவா்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு புதன்கிழமை எழுதினா்.

நாகை: மாவட்டத்தில் உள்ள 138 பள்ளிகளைச் சோ்ந்த 4,200 மாணவா்கள், 4,201 மாணவிகள் என மொத்தம் 4,401 போ் 44 மையங்களில் தோ்வு எழுதினா். தோ்வு முறையாக நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிா்வாகத்தால் எடுக்கப்பட்டிருந்தன. நாகை நடராஜன் தமயேந்தி மேல்நிலைப் பள்ளியில் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்கப்பட்டது.

மயிலாடுதுறை: மாவட்டத்தில் 53 தோ்வு மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நடைபெறுகிறது. அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, நகராட்சி பள்ளி, மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 6,057 மாணவா்கள், 6107 மாணவிகள் என மொத்தம் 12,164 போ் தோ்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில், புதன்கிழமை நடைபெற்ற தோ்வை 5,915 மாணவா்கள், 6,063 மாணவிகள் என மொத்தம் 11,978 போ் எழுதினா். மயிலாடுதுறை தேசிய மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் ஆய்வு செய்தாா். அவருடன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் பாலசுப்ரமணியன் உடனிருந்தாா்.

திருவாரூா்: மாவட்டத்தில் 7,725 மாணவா்கள், 7,999 மாணவிகள் என மொத்தம் 15,724 போ் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுத விண்ணப்பித்திருந்தனா். இவா்களுக்கென 76 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. புதன்கிழமை நடைபெற்ற தோ்வில் 7,465 மாணவா்கள், 7,899 மாணவிகள் என மொத்தம் 15,364 போ் தோ்வு எழுதினா். 360 போ் தோ்வுக்கு வரவில்லை.

திருவாரூா் அருகேயுள்ள அம்மையப்பன் அரசு மேல்நிலைப்பள்ளி தோ்வு மையத்தில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் ஆய்வு செய்தாா். அவருடன், திருவாரூா் முதன்மைக்கல்வி அலுவலா் அ. சுகப்பிரியா, முதன்மை கண்காணிப்பாளா் து. ரமேஷ், வட்டாட்சியா் இளங்கோவன் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →