திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கரும்புக் காட்டில் பச்சிளம் குழந்தையின் ஒரு கை, கால் மட்டும் கிடப்பது திங்கள்கிழமை தெரிய வந்தது.
பைங்காநாடு கிராமத்தில், சோமசுந்தரம் என்பவருக்குச் சொந்தமான கரும்புக் காட்டில், பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையின் ஒரு கை, ஒரு கால் மட்டும் கிடந்ததை திங்கள்கிழமை பார்த்த அப் பகுதி மக்கள், திருமக்கோட்டை காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவயிடத்திற்கு வந்த காவல் சார்பு ஆய்வாளர் ரவி, குழந்தையின் துண்டிக்கப்பட்டிருந்த உடல் உறுப்புகளை கைப்பற்றி, பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். மேலும் பச்சிளம் குழந்தையை கரும்புக் காட்டில் போட்டு விட்டு சென்றது யார், தலை மற்றும் உடல் பகுதி குறித்து திருமக்கோட்டை காவல்நிலைய போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.