திருவாரூர்

திருவாரூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விளையாட்டில் சிறப்பிடம்

DIN

திருவாரூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சென்னையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜூன் 14 முதல் 18-ஆம் தேதி வரை "ஸ்டான்லியா 2017' என்ற பெயரில்  மருத்துவக் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.
இதில் திருவாரூர் மருத்துவக் கல்லூரியிலிருந்து விளையாட்டுச் செயலர் விமலநாதன், முகிலா தலைமையில் 45 பேர் பங்கேற்றனர். வட்டு எறிதலில் துளசிஅய்யா மற்றும் திலீப், குண்டு  எறிதல் ஆண்கள் பிரிவில் துளசி அய்யா, பெண்கள்  பிரிவில் மாதங்கி, 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில்  முகிலா, கேரம் விளையாட்டில் ஹரினி,  செல்வராணி, நீச்சல் போட்டியில் இனியா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரி  முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம் பதக்கம் மற்றும்  பாராட்டுச் சான்றிதழை வழங்கிப் பாராட்டினார்.
பாராட்டு நிகழ்ச்சியில் விளையாட்டு ஆலோசகர்  கமலின்விஜி, விடுதிக் காப்பாளர்கள் சிவக்குமார், வாசுகி, மாணவர் செயலர் சதா பிரமோத் குமார்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

SCROLL FOR NEXT