திருவாரூர்

நீடாமங்கலம் அருகே வீடுகட்ட பள்ளம் தோண்டியபோது சாமி சிலைகள் கண்டெடுப்பு

DIN

நீடாமங்கலம் அருகே வீடு கட்ட ஞாயிற்றுக்கிழமை பள்ளம் தோண்டியபோது 3 சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம் கொரடாச்சேரி அருகேயுள்ள வெண்ணவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜீவ்காந்தி. இவர் புது வீடு கட்டுவதற்கான பணிகளை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார். இதற்காக கட்டுமானத் தொழிலாளர்கள் பள்ளம் தோண்டியபோது, உலோகத்தினாலான அரை அடி உயரத்தில் காளிங்கநர்த்தன கிருஷ்ணர், பெருமாள், அம்பாள் ஆகிய 3 சுவாமி சிலைகள் மற்றும் பூஜை செய்யப் பயன்படும் பொருள்கள் பூமியில் புதைந்திருந்தது தெரியவந்தது.
தகவலறிந்த நீடாமங்கலம் வட்டாட்சியர் குணசீலி மற்றும் வருவாய்த் துறையினர் நிகழ்விடத்துக்குச் சென்று, சுவாமி சிலைகளை பார்வையிட்டனர். பின்னர் அந்த சிலைகள் நீடாமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
இந்த சிலைகள் பஞ்சலோகத்தால் ஆனதா அல்லது பித்தளை சிலைகளா என்பது குறித்து சிலை மதிப்பீட்டாளர் ஆய்வுக்குப்பின் தெரியவரும் என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

SCROLL FOR NEXT