திருவாரூர்

முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கக் கூட்டம்

DIN

நீடாமங்கலத்தில் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்கத்தின் நீடாமங்கலம் கிளைத் தலைவர் எம். அப்பாவு தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஆர். தாமோதரன், எழுத்தாளர் முல்லைக்கரை கணேசன், பி. ரெத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் தமிழ்மணி வரவேற்றார். இணைச் செயலாளர் அம்பிகாபதி அறிமுகவுரையாற்றினார். சங்க நிர்வாகிகள் கி. சேதுரத்தினம், கு. முனியாண்டி உள்ளிட்டோர் சங்கத்தின் சார்பில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்துப் பேசினர்.
கூட்டத்தில், சென்னையில் ஜூன் 26-ஆம் தேதி நடைபெறும் மாநில மாநாட்டில் கலந்துகொள்வது என முடிவு செய்யப்பட்டது. பொருளாளர் நாகூரான் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT