திருவாரூர்

விழிப்புணர்வு கையேடு வெளியீடு

DIN

திருவாரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நுகர்வோர் உரிமைகள் தினவிழாவில் விழிப்புணர்வு கையேடு வெளியிடப்பட்டது.
 திருவாரூரில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின் சார்பில் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா நடைபெற்றது. தலைவர் பிறை. அறிவழகன் தலைமையில் நடைபெற்ற விழாவை கோட்டாட்சியர் இரா. முத்துமீனாட்சி தொடங்கி வைத்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நுகர்வோரின் உரிமையும்-கடமையும், விழித்தெழுவோம் நுகர்வோரே, தகவல் பெறுவது ஒரு கலை ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது. நுகர்வோர் விழிப்புணர்வு கையேட்டை மாவட்ட நுகர்வோர் குறைதீர்மன்றத் தலைவர் ஜெயச்சந்திரன் வெளியிட முதல் பிரதியை மாவட்ட வழங்கல் அலுவலர் இருதயராஜ் பெற்றுக் கொண்டார்.
 பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கு. பார்வதி, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்ற உறுப்பினர் சிவசங்கரி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், மகளிர் சுய உதவிக்கு ழுவினர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT