திருவாரூர்

தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

DIN

மன்னார்குடியை அடுத்த பரவாக்கோட்டை ஊராட்சி பகுதியில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மூத்த உறுப்பினர் தங்கவேல் தலைமை வகித்தார். கிளைச் செயலர்கள் மார்க்ஸ், ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், பரவாக்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வேண்டும். நியாவிலைக் கடைகளில் அனைத்து உணவுப் பொருள்களும் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள்
வலியுறுத்தப்பட்டன.
கட்சியின் மாவட்ட, ஒன்றிய நிர்வாக் குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், திருஞானம்,டி. பன்னீர்செல்வம், எஸ். தங்கவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வுகளில் வேலூா் பின்தங்குவதற்கான காரணங்களை அறிய சமூக ஆய்வு

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்

8% அதிகரித்த நிலக்கரி இறக்குமதி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

30 கிலோ கஞ்சா கடத்தல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT