முகப்பு
திருவாரூர்

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, திருவாரூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:51 PM
பகிர்:

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, திருவாரூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டும், சிலர் உயிரிழந்தும் வருகின்றனர். டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.
திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலர் வடிவழகன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் நாகை நாடாளுமன்றத் தொகுதிச் செயலர் இடிமுரசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →