முகப்பு
இந்தியா

தொடர் பிரச்னைகள்... இண்டிகோ இசிஓ ராஜிநாமா!

இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் தனது பதவியை ராஜிநாமா செய்தது குறித்து...

Updated On : 10 மார்ச், 2026 at 1:48 PM
இண்டிகோ விமானம்
பகிர்:

இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் தனது பதவியை இன்று (மார்ச் 10) ராஜிநாமா செய்தார்.

கடந்த சில மாதங்களாக தொழில்நுட்பக் கோளாறு, விமான சேவை ரத்து உள்ளிட்ட மிகப்பெரிய செயல்பட்டு இடையூறுகளை இண்டிகோ நிறுவனம் சந்தித்ததைத் தொடர்ந்து பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

இவரின் ராஜிநாமாவைத் தொடர்ந்து இண்டிகோவின் மேலாண்மை இயக்குநராக உள்ள ராகுல் பாட்டியா இடைக்கால தலைமை செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

விமான போக்குவரத்து அமைச்சகத்தின் தொடர் விசாரணைகளுக்குப் பின் பீட்டர் எல்பர்ஸ் ராஜிநாமா செய்துள்ளார்.

இண்டிகோ நிறுவனத்தின் பெயரில் இன்டர்குளோப் நிறுவனம் விமானங்களை இயக்கி வருகிறது. ராஜிநாமா தொடர்பாக இன்டர்குளோப் நிறுவனத் தலைவர் விக்ரம் சிங் மேத்தா கூறியதாவது:

''நிறுவனத்தின் கலாசாரத்தை வலுப்படுத்தவும், செயல்பாட்டு சிறப்பை மீட்டுருவாக்கம் செய்து சிறப்பான பராமரிப்பு சேவையை வழங்குவதற்கும் இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக ராகுல் பாட்டியா பொறுப்பேற்றுள்ளார்.

பயணிகளிடையே நம்பகத்தன்மை ஏற்படுத்த தொழில்முறையை நேர்த்தியில் உறுதியுடன் செயல்படும் வகையில் இவரின் பணிக்காலம் இருக்கும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

summary

IndiGo CEO Pieter Elbers resigns

முழு கட்டுரையைப் படிக்க →