திருவாரூர்

தூக்கிட்ட நிலையில் பெண் சடலம்; கணவர் தலைமறைவு

DIN

மன்னார்குடி அருகே  தூக்கிட்ட நிலையில் பெண் சடலமாக கிடந்தார். அவரது கணவர் தலைமறைவாகிவிட்டார்.
கோட்டூரை அடுத்துள்ள ரெகுநாதபுரத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(45). இவரது மனைவி லில்லி(35). இவர்களுக்கு 6 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், லில்லி தனது வீட்டில் தூக்கிட்ட நிலையில் வியாழக்கிழமை சடலமாக கிடப்பதைப் பார்த்தவர்கள் களப்பால் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் நிகழ்விடத்துக்கு வந்த, காவல் ஆய்வாளர் பரந்தாமன், லில்லியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். இந்நிலையில் செந்தில்குமார் தலைமை மறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.  இதுகுறித்து, களப்பால் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

SCROLL FOR NEXT