திருவாரூர்

மனநலம் பாதித்தவர் தாக்கி முதியவர் சாவு

DIN

மன்னார்குடி அருகே மனநலம் பாதித்தவர் தாக்கியதில் காயமடைந்த முதியவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
திருமக்கோட்டை பிரதான சாலையைச் சேர்ந்தவர் வி. கேப்டன்(76).  இவர், திருமக்கோட்டை டாஸ்மாக் கடை அருகே செவ்வாய்க்கிழமை நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த மேலநத்ததைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவரான வி. அமுதவாசன் (60) கேப்டனை கட்டையால் தாக்கினாராம்.
இதில் காயமடைந்த முதியவர் கேப்டன் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து, திருமக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லியனூரில் அந்திம புஷ்கரணி ஆரத்தி

கால்வாய் பணி: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்

தென்காசியில் சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பு சாா்பில் முப்பெரும் விழா

SCROLL FOR NEXT