முகப்பு
திருவாரூர்

சாலையை சீரமைக்கக் கோரி பிச்சை எடுக்கும் போராட்டம்

திருவாரூர் அருகே  தேசிய  நெடுஞ்சாலையை சீரமைக்க வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சி சார்பில்  பிச்சை எடுத்து நெடுஞ்சாலைத் துறைக்கு பணம் அனுப்பும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:14 PM
பகிர்:

திருவாரூர் அருகே  தேசிய  நெடுஞ்சாலையை சீரமைக்க வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சி சார்பில்  பிச்சை எடுத்து நெடுஞ்சாலைத் துறைக்கு பணம் அனுப்பும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
 தஞ்சை- திருவாரூர்- நாகை நெடுஞ்சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுவதால், அதில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 
மேலும், அதிக அளவில் விபத்துகள் ஏற்பட்டு,  சில  நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதனால், இந்த  சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும், தன்னார்வலர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சார்பில்  திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் கடைவீதியில் பிச்சை எடுத்து, அந்த பணத்தை நெடுஞ்சாலைத் துறைக்கு அனுப்பும் போராட்டத்தை நடத்தினர். இதன்மூலம் நெடுஞ்சாலைத் துறையினர் சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 
இந்த போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் லத்தீப் தலைமை வகித்தார்.
 இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →