திருவாரூர்

சாரணர் படை நிறுவனர் நாள் விழா

DIN

திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காந்திஜி சாரணர் படை சார்பில், சாரணர் படை நிறுவனர் நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, பள்ளியில் சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்தவரும், உலக தலைமை சாரணருமான ராபர்ட் ஸ்டீபன்சன் ஸ்மித் பேடன் பவுல் அவர்களின் 161 -ஆவது பிறந்த நாள்,  உலக தலைமை சாரணியுமான ஓலேவ்கிளார் பேடன் பவுல் அவர்களின் 129 -ஆவது பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் பூ. திருமாறன் தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குநர் கி. பாலமுருகன், தொழிற்கல்வி ஆசிரியை கா. நிர்மலா, ஆசிரியை கே. உமாமகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியை கே. வெற்றிச்செல்வி வரவேற்றார்.
பேடன் பவுல் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்தும், சாரண இயக்கம் தோன்றுவதற்கான காரணங்கள் குறித்தும் சாரண ஆசிரியர் பொ. சக்கரபாணி பேசினார். மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT