பேரளம் ஸ்ரீசங்கரா பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவில், தமிழர்களின் பண்பாடு, தமிழ்குலப் பெண்களின் சீரிய திறமைகள், பொங்கல் பண்டிகையின் நோக்கங்கள், கொள்கைகள் குறித்து மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் பேசினர்.
கும்மிப்பாட்டு, உறியடி, கரகாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி இயக்குநர் சுகுமார் பரிசுகள் வழங்கினார்.
இதில், பள்ளித் தாளாளர் வெற்றிச்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.