திருவாரூர்

ஸ்ரீசங்கரா பள்ளியில் பொங்கல் விழா

DIN

பேரளம் ஸ்ரீசங்கரா பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. 
விழாவில், தமிழர்களின் பண்பாடு, தமிழ்குலப் பெண்களின் சீரிய திறமைகள், பொங்கல் பண்டிகையின் நோக்கங்கள், கொள்கைகள் குறித்து மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் பேசினர். 
கும்மிப்பாட்டு, உறியடி, கரகாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி இயக்குநர் சுகுமார் பரிசுகள் வழங்கினார்.
இதில், பள்ளித் தாளாளர் வெற்றிச்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT