திருவாரூர் அருகே புதை சாக்கடையில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யக் கோரி சாலை மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் அருகேயுள்ள கேக்கரை செல்லும் சாலையில் புதை சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு, அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் சாலை வழியாக அருகிலிருந்த குளத்துக்குச் சென்று கலப்பதாகவும், இதன் காரணமாக சுகாதாரச் சீர்கேடுகள் மற்றும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என புகார் தெரிவித்து அப்பகுதி மக்கள் கேக்கரை சாலையில் நகராட்சி பள்ளிவாசல் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த நகராட்சி அதிகாரிகள் குழாய் சரி செய்து தருவதாக கூறியதைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.