நீடாமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை திராவிடர் கழக பொதுக் கூட்டம் நடைபெற்றது.
திராவிடர் கழக மாநில பொதுக் குழு உறுப்பினர் ஆ. சுப்பிரமணியன் நினைவையொட்டி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட புரவலர் ப. சிவஞானம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில், தி.க. பொதுச் செயலர் ரா. ஜெயக்குமார், மாவட்ட தலைவர்கள் சித்தார்த்தன், ரா. கோபால், பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில அமைப்பாளர் சி. ரமேசு, தி.க. மாவட்டச் செயலர் பெ. வீரையன், தி.க. பேச்சாளர் பூவை புலிகேசி, காங்கிரஸ் கட்சி மாவட்ட துணைத் தலைவர் நீலன். அசோகன், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலர் நடேச. தமிழார்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.