மக்கள் நேர்காணல் முகாம்
நீடாமங்கலம் அருகேயுள்ள ராயபுரம் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
நீடாமங்கலம் அருகேயுள்ள ராயபுரம் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு மன்னார்குடி கோட்டாட்சியர் சு. செல்வசுரபி தலைமை வகித்தார். முகாமில் அளிக்கப்பட்ட 163 மனுக்களில் 98 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதியோர் உதவித்தொகை, விவசாயிகளுக்கு உபகரணங்கள், மனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் 91 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முகாமில், தனி வட்டாட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) ஷீலா, வட்டாட்சியர் குணசீலி ஆகியோர் பங்கேற்றனர்.