திருவாரூர்

திராவிடர் கழக பொதுக் கூட்ட பேச்சுக்கு பாஜக எதிர்ப்பு

DIN

திருத்துறைப்பூண்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற திராவிடர் கழக பொதுக் கூட்டத்தில் இந்துக்களை தரக்குறைவாக பேசியதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 
திருத்துறைப்பூண்டியில் பெரியாரின் 139-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலர் கி. வீரமணியின் 85-ஆவது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் பேச்சாளர்கள் ராம. அன்பழகன், அதிரடி அன்பழகன் உள்ளிட்டோர் இந்துக்களை தரக்குறைவாக பேசினார்களாம். 
இதையறிந்த, பாஜக நகரத் தலைவர் வினோத், மாவட்டச் செயலர் இளசுமணி உள்ளிட்டோர் எதிர்ப்புத் தெரிவித்து கூட்டம் நடைபெற்ற இடம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னை ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொண்டனர். இதுதொடர்பாக பாஜக சார்பில் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT