திருவாரூரில் பழுதடைந்துள்ள விநாயகர் தேரை புதுப்பிப்பதற்காக இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் வியாழக்கிழமை தேரை பார்வையிட்டனர்.
ஆசியாவிலேயே பெரியத் தேரான, திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டத்தின்போது, 5 தேர்கள் செல்வது வழக்கம். இந்த ஐந்து தேரில் ஒன்றான விநாயகர் தேர், மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதையடுத்து, இந்த தேரை பிரித்துவிட்டு புதிய தேர் செய்வதற்கானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
இதையொட்டி, அறநிலைத்துறை அலுவலர்கள் விநாயகர் தேரை வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.