காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து: போராட்டம் நடத்த முடிவு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து அனைத்துத் தரப்பினரையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்த மக்கள் அதிகாரம் அமைப்பு முடிவெடுத்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து அனைத்துத் தரப்பினரையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்த மக்கள் அதிகாரம் அமைப்பு முடிவெடுத்துள்ளது.
திருவாரூரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முரளி தலைமை வகித்தார். இதில் நிர்வாகிகள் ஆசாத், ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
டெல்டா மாவட்டங்களில் 51 லட்சம் விவசாயக் குடும்பங்களைப் பாதுகாக்கும் வகையில், காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். ஆறு வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், காலம் தாழ்த்திய மத்திய அரசை கண்டிப்பது, கார்ப்பரேட் நலன்களுக்காகவும், ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல் கேஸ் ஆகிய கனிம வளங்களை எடுக்கும் முயற்சிகளுக்காகவும் துணைப் போகும் மத்திய அரசை கண்டித்து, மாணவர்கள், இளைஞர்கள், வர்த்தகர்கள் என அனைத்து தரப்பினரையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.