திரு.வி.க கல்லூரியில் புகைப்படக் கண்காட்சி
திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி காட்சிவழி தகவல் தொடர்பியியல் துறை சார்பில் ஒளி பிம்பங்கள் என்னும் தலைப்பில்
திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி காட்சிவழி தகவல் தொடர்பியியல் துறை சார்பில் ஒளி பிம்பங்கள் என்னும் தலைப்பில் புகைப்படக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். காட்சிவழித் தகவல் தொடர்பியல் துறைத் தலைவர் ஹேமமாலினி முன்னிலை வகித்தார். இதில் பிரிட்ஜ் அகாதெமி கல்லூரி பேராசிரியர் ஆர். தயாளன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, சிறந்த புகைப்படத்துக்குப் பரிசு வழங்கினார்.