முகப்பு
திருவாரூர்

வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் திருட்டு

திருவாரூரில் மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகைகளை திருடிச் சென்றது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

Updated On : 22 மே, 2018 at 12:52 AM
பகிர்:

திருவாரூரில் மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகைகளை திருடிச் சென்றது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
திருவாரூர் வடக்கு கோபுர வாசலைச் சேர்ந்தவர் பாஸ்கரன் மகன் பிரவீன் (38). மத்திய பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார்.
கோடைவிடுமுறையை முன்னிட்டு, தனது வீட்டு சாவியை அருகில் வசிக்கும் உறவினர் வீட்டில் கொடுத்துவிட்டு, மே 16-ஆம் தேதி பொள்ளாச்சிக்கு
சென்றுள்ளார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டுக்குச் சென்ற உறவினர், வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு, பிரவீனுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் விரைந்து வந்து, பார்த்தபோது, 12 பவுன் நகை திருட்டுப் போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து, திருவாரூர் நகர காவல் நிலையத்தில் பிரவீன் அளித்த புகாரில், 12 பவுன் நகை திருட்டுப் போயிருப்பதாக தெரிவித்துள்ளார். புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.