திருவாரூர்

பெண்ணை தாக்கிய இருவர் கைது

DIN

நீடாமங்கலம் அருகே பெண்ணைத் தாக்கிய இருவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
நீடாமங்கலம் அருகே உள்ள ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளரான தங்கையன் மகன் வினோத். இவரது மனைவி நிரஞ்ஜனா (23). அதே பகுதியைச் சேர்ந்தவர் வழக்குரைஞர் தமிழ் ஸ்டாலின் பாரதி. தங்கையன் குடும்பத்துக்கும், தமிழ் ஸ்டாலின் பாரதி குடும்பத்துக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில், தமிழ் ஸ்டாலின் பாரதியும் அவரது சகோதரர் தமிழனும் சேர்ந்து கடந்த நவ.10-ஆம் தேதி வினோத்தை தாக்கினராம். பின்னர், வினோத்தின் வீட்டுக்குச் சென்ற தமிழ் ஸ்டாலின் பாரதி, தமிழன், அன்புச்செல்வன், சின்னக்குட்டி தமிழ்ச்செல்வன் ஆகிய நால்வரும் வினோத்தின் மனைவி நிரஞ்ஜனாவை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, நிரஞ்ஜனா அளித்த புகாரின் பேரில், நீடாமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் பாலமுத்தையா மற்றும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அன்புச்செல்வன், தமிழ் செல்வன் ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT