திருவாரூர்

முத்துப்பேட்டை பகுதியில் சீரமைப்புப் பணி: எம்எல்ஏ ஆய்வு

DIN

முத்துப்பேட்டையில் புயலால் பாதித்த பகுதிகளில் நடைபெறும் சீரமைப்புப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினர் ப. ஆடலரசன் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு,  ஆய்வு செய்தார்.
திருவாருர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதி மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் ஆயிரக்கணக்காண வீடுகள், லட்சக்கணக்கான மரங்கள், கால்நடைகள் என அனைத்து வாழ்வாதாரத்தையும் இழந்து மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், புயல் பாதிப்புகள் ஏற்பட்டு 4 நாள்களாகியும் இப்பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை.  மின்சாரம், மற்றும் தொலைத்தொடர்பு  வசதிகள் சீரமைக்கப்படாத நிலையில் உள்ளன. இப்பகுதிகளில் தொடர்ந்து சீரமைப்புப் பணிகளை நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ ப.ஆடலரசன் பார்வையிட்டு,  சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்கும் படி அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

SCROLL FOR NEXT