திருவாரூர்

பெண் சடலம் மீட்பு

DIN

திருவாரூர் அருகே வெள்ளிக்கிழமை மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத பெண் சடலம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருவாரூர் அருகே உள்ள மருதப்பட்டினம் வழியாகச் செல்லும் ஓடம்போக்கி ஆற்றின் கரையோரத்தில் பெண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் பழவனக்குடி கிராம நிர்வாக அலுவலர் மார்டின்ஜியோ ஆரோக்கியராஜூக்கு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அவர் வைப்பூர் காவல் நிலையத்தில் அளித்த தகவலின் பேரில், போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று, சடலத்தை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT