திருவாரூர்

சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் பேரணி

DIN

சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கக் கோரி திருவாரூரில் வியாழக்கிழமை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது. 
வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், உணவூட்ட மானியம் ரூ. 5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும்போது அமைப்பாளருக்கு ரூ. 5 லட்சமும், சமையலர் மற்றும் உதவியாளருக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த முதலமைச்சரின் கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது.
சங்க மாவட்டத் தலைவர் வி.சி. குமார் தலைமையில் திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே தொடங்கிய பேரணி பனகல் சாலை வழியாக பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT