திருவாரூர்

பருத்தி குவிண்டால் ரூ. 6,009-க்கு விற்பனை

DIN

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில், பருத்தி ஒரு குவிண்டால் ரூ. 6,009-க்கு விற்பனையானது. 
இந்த பருத்தி ஏலத்தில் திருவாரூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து 812 விவசாயிகள் தங்களது உற்பத்தி பருத்தியை கொண்டு வந்திருந்தனர். ஏலத்துக்கு வந்திருந்த பருத்தியின் மொத்த அளவு 993.5 குவிண்டால் ஆகும். இதன் மதிப்பு ரூ. 58 லட்சம். ஏலத்தில் அதிகபட்சமாக குவிண்டாலுக்கு ரூ. 6,009, குறைந்தபட்சமாக ரூ. 5,419 என சராசரியாக ரூ. 5,761-க்கு விற்பனையானது. இதில், வேளாண்மை துணை இயக்குநர் (பொ) வ. கிருஷ்ணமூர்த்தி, விற்பனைக் குழுச் செயலர் சேரலாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

SCROLL FOR NEXT