திருவாரூர்

கோயிலை திறக்கக் கோரி மனு

DIN

திருவாரூர் அருகே பூட்டி சீல் வைக்கப்பட்ட கோயிலை வழிபாட்டுக்காக திறக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 இதுதொடர்பாக, அகில பாரத இந்து மகா சபாவின் மாநில துணைத் தலைவர் வி.வேலன், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு:
 திருவாரூர் அருகே வண்டாம்பாளை மகாசக்தி மாரியம்மன் கோயிலில், இருதரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னையால் கடந்த 13-ஆம் தேதி, திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின் பேரில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால், ஆண்டுதோறும் பாரம்பரியமாக நடைபெறும் சித்திரைத் திருவிழா நிகழாண்டு நடைபெறவில்லை. 
 எனவே, மக்களின் வழிபாட்டுக்காக உடனடியாக கோயிலை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT