திருவாரூர்

பம்பு செட் கொட்டகைக்கு தீ வைப்பு

DIN

கூத்தாநல்லூர் அருகே பம்பு செட் கொட்டகைக்கு அண்மையில் இரவு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
வடகோவனூர், ஜீவா தெருவைச் சேர்ந்தவர் மதியழகன் (47). இவருக்குச் சொந்தமான பம்பு செட் கொட்டகைக்கு வெள்ளிக்கிழமை இரவு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்தனராம். தகவலறிந்த கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மா.வே. சம்பத்குமார் தலைமையில், தீயணைப்புப் படை வீரர்கள் வந்து  கடுமையாக போராடி, தீ மேலும் பரவி விடாமல் அணைத்தனர். இதில், ரூ.45 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. முன்விரோதம் காரணமாக பம்பு செட்டுக்கு தீ வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

SCROLL FOR NEXT