திருவாரூர்

நீடாமங்கலம் கோயிலில் ஆடிப்பூர உத்ஸவம்

DIN

நீடாமங்கலம் சந்தானராம சுவாமி கோயிலில் ஆடிப்பூர உத்ஸவ வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி சீதா, லெட்சுமணர், அனுமன் சமேத சந்தானராமர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் வே. வெற்றிச்செல்வன் மற்றும் கோயில் பணியாளர்கள், நீடாமங்கலம் வாணியர் நலச் சங்கத்தினர், சந்தானராமசுவாமி கைங்கர்ய சபாவினர் செய்திருந்தனர். 
இதேபோல், நீடாமங்கலம் லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் ஆடிப்பூரத்தையொட்டி, அனைத்து சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் பரம்பரை அறங்காவலர் சுரேஷ் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT