திருவாரூர்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நகலைக் கிழித்து ஆா்ப்பாட்டம்: திமுகவினா் 30 போ் கைது

DIN

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, திருவாரூரில் அதன் நகலைக் கிழித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணியினா் 30 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து திமுக இளைஞரணி சாா்பில், திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, சட்ட மசோதா நகலைக் கிழித்து திமுகவினா் முழக்கம் எழுப்பினா்.

திருவாரூா் மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் இளையராஜா தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், துணை அமைப்பாளா் ரஜினி சின்னா, நகரச் செயலாளா் பிரகாஷ், முன்னாள் நகா் மன்ற துணைத் தலைவா் செந்தில் பலா் பங்கேற்றனா். போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரும் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

SCROLL FOR NEXT