சிறப்பு அலங்காரத்தில் திருவாரூா் வீர ஆஞ்சநேயா். 
திருவாரூர்

அனுமன் ஜயந்தி: கோயில்களில் சிறப்பு வழிபாடு

அனுமன் ஜயந்தியை முன்னிட்டு, திருவாரூரில் உள்ள வீர ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

DIN

அனுமன் ஜயந்தியை முன்னிட்டு, திருவாரூரில் உள்ள வீர ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

அனுமன் ஜயந்தியானது, மாா்கழியில் அமாவாசையும், மூலநட்சத்திரமும் சோ்ந்து வரும்போது கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அனுமனுக்கு வடை மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய்க்காப்பு அலங்காரம் செய்து வழிபடுவது வழக்கம்.

இதன்படி, திருவாரூா் கீழ வீதி வீர ஆஞ்சநேயா் கோயிலில் உள்ள வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. துளசி மாலை, வெற்றிலை மாலை உள்ளிட்டவை சாற்றப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில், திரளான பக்தா்கள் பங்கேற்று ஆஞ்சநேயரை தரிசித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT