திருவாரூர்

உதவித்தொகை: கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கல்வி உதவித்தொகை வழங்கப்படாததைக் கண்டித்து, மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கல்லூரி மாணவர்கள்

DIN

கல்வி உதவித்தொகை வழங்கப்படாததைக் கண்டித்து, மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கல்லூரியில் கழிவறை, விளையாட்டு மைதானம், நூலகம் உள்ளிட்ட அடிப்படை வசதிளை மேம்படுத்த வேண்டும். கல்வி உதவித்தொகையைத் தாமதப்படுத்தாமல், உடனடியாக வழங்க வேண்டும். கல்லூரி வளாகத்தில் கஜா புயலால் விழுந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கம் எழுப்பப்பட்டது.
மாணவர் பெருமன்ற நிர்வாகி வி. சரவணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஜெ.பி. வீரபாண்டியன், மாவட்டச் செயலர் சு. பாலசுப்ரமணியன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில், மாவட்டத் துணைத் தலைவர் ஆர்.ஜே. பாரதி, கல்லூரியின் மாணவர் பெருமன்ற நிர்வாகிகள் கிஷோர், ஆர். ஹரிகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT