திருவாரூர்

உதவித்தொகை: கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

கல்வி உதவித்தொகை வழங்கப்படாததைக் கண்டித்து, மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கல்லூரியில் கழிவறை, விளையாட்டு மைதானம், நூலகம் உள்ளிட்ட அடிப்படை வசதிளை மேம்படுத்த வேண்டும். கல்வி உதவித்தொகையைத் தாமதப்படுத்தாமல், உடனடியாக வழங்க வேண்டும். கல்லூரி வளாகத்தில் கஜா புயலால் விழுந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கம் எழுப்பப்பட்டது.
மாணவர் பெருமன்ற நிர்வாகி வி. சரவணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஜெ.பி. வீரபாண்டியன், மாவட்டச் செயலர் சு. பாலசுப்ரமணியன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில், மாவட்டத் துணைத் தலைவர் ஆர்.ஜே. பாரதி, கல்லூரியின் மாணவர் பெருமன்ற நிர்வாகிகள் கிஷோர், ஆர். ஹரிகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT