திருவாரூர்

காலமானார்: சிவ. கேதார கெளரி

DIN

திருவாரூர் ஸ்ரீ ஜி.ஆர்.எம். கல்வி முகவாண்மையின் முன்னாள் செயலரும், ஜி.ஆர்.எம். பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியருமான சிவ. கேதார கெளரி (73)  உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார். 
இவர் திருமணம் ஆகாதவர். கடந்த 1982- இல் ஸ்ரீ ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்ற கேதார கெளரி  25 ஆண்டுகள் தலைமை ஆசிரியராகப் பணி புரிந்தார். இவர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்.
பணி ஓய்வுக்குப்பிறகு 1997-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரை 11 ஆண்டுகள், ஸ்ரீ ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வ.சோ ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீ தியாகராஜா தொடக்கப் பள்ளி ஆகியவற்றின் தாளாளராகவும் இருந்துள்ளார். 
சென்னை, வேளச்சேரியில் தனது சகோதரருடன் வசித்து வந்த கேதார கெளரி, சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் செவ்வாய்க்கிழமை காலமானார். இவரது இறுதிச் சடங்கு சென்னையில் புதன்கிழமை நடைபெறுகிறது. தொடர்புக்கு 9444417814.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT