திருவாரூர்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதித்து சட்டப் பேரவையில் அறிவிக்க வலியுறுத்தல்

DIN

திருக்காரவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதித்து, சட்டப் பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருக்காரவாசலில், ஹைட்ரோ கார்பன் எரிவாயுத் திட்ட எதிர்ப்பு போராட்டக் குழுவின் அவசரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. போராட்டக் குழுவின் தலைவர் எஸ். தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் குழுவின் செயலாளர் எம். சுப்பையன், பொருளாளர் ப. சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நாடாளுமன்றம் நிறைவடைய உள்ள நிலையில், திருக்காரவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து மத்திய அரசு மௌனம் காத்து வருவதாக கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த திட்டம் குறித்து எடுத்துரைக்க மறுப்பது வேதனையளிக்கிறது என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தீர்மானங்கள்: தமிழக சட்டப் பேரவை கூடும் முன்னரே திருவாரூர் மாவட்ட ஆட்சியரோடு, தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் போராட்டக்களத்துக்கு வந்து கோரிக்கை குறித்து கேட்டறிந்ததின் அடிப்படையிலும், நாகை எம்எல்ஏ தமிமுன் அன்சாரி, சட்டப் பேரவையில் கோரிக்கை வைத்துள்ளதன் அடிப்படையிலும், தமிழக முதல்வர்,  திருக்காரவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு நிரந்தர தடை விதித்து, தற்போதைய சட்டப் பேரவைக் கூட்டத்தில் அறிவிக்க வேண்டும்.
 திருக்காரவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொள்கைப் பூர்வமாக கைவிடவும், நிரந்தர தடை விதிக்கவும் மறுக்கும் ஆட்சியாளர்கள் மற்றும் போராட்டத்திற்கு ஆதரவளிக்க  மறுக்கும் அரசியல் கட்சிகளுக்கு நாடாளுமன்ற தேர்தல் களத்தில் எதிர்ப்பு தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காத்திருப்புப் போராட்டம்...
இதற்கிடையில், 17- ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் பங்கேற்று, கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

SCROLL FOR NEXT