திருவாரூர்

சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் இருசக்கர வாகனம் திருட்டு

DIN

மன்னார்குடி அருகே ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் ஞாயிற்றுக்கிழமை திருடிச் சென்றனர்.
மன்னார்குடியை அடுத்துள்ள வாஞ்சூர் பிரதான சாலையைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் க. ராமநாதன் (60). இவர், தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் வாசலில் ஞாயிற்றுக்கிழமை காலை நிறுத்தியிருந்தார். பின்னர், மாலையில் சென்று பார்த்தபோது, இருசக்கர வாகனம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
வீட்டின் முன்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், மர்ம நபர்கள் இருவர், இருசக்கர வாகனத்தை திருடிச்செல்வது தெரியவந்ததது.
இதுகுறித்து, மன்னார்குடி ஊரக காவல் நிலையத்தில் ராமநாதன் புகார் அளித்தார், அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT