திருவாரூர்

உயிர் வேதியியல் கருத்தரங்கில் மகளிர் கல்லூரி மாணவியர் சிறப்பிடம்

DIN

மன்னார்குடி அருகேயுள்ள சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரி உயிர் வேதியியல் துறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்பிடம் பெற்றனர். 
தஞ்சையில் உள்ள மருதுபாண்டியர் கல்லூரியில் உயிர் வேதியியல் துறை சார்பில் நடைபெற்ற ஒரு நாள் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. இதில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரி ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டுத் துறை, உயிர் வேதியியல் துறை, நுண்ணுயிரியல் துறையை சேர்ந்த 40  மாணவியர் கலந்துகொண்டனர். 
இதில், இக்கல்லூரியின் ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டுத் துறையினர் நெருப்பில்லா சமையலில் முதல் மற்றும் இரண்டமிடத்தையும், மாதிரி வழங்கலில் மூன்றாம் இடத்தையும், உயிர் வேதியியல் துறையினர் ரங்கோலி மற்றும் வாய்மொழி பேசுவதில் இரண்டாமிடத்தையும், நுண்ணுயிரியல் துறையினர் நெருப்பில்லா சமையலில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். சிறப்பிடம் பெற்ற மாணவியரை கல்லூரித் தாளாளர் வி. திவாகரன், முதல்வர் சீ. அமுதா உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

SCROLL FOR NEXT