முகப்பு
திருவாரூர்

தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி

திருவாரூரில் திங்கள்கிழமை தமிழக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியை

Updated On : 26 பிப்ரவரி 2019, 1:24 am IST
பகிர்:

திருவாரூரில் திங்கள்கிழமை தமிழக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியை தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் திறந்து வைத்தார்.
திருவாரூர் பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், தமிழக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தலைமையில் நடைபெற்ற கண்காட்சியை தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் திறந்து வைத்து பார்வையிட்டார். 
கண்காட்சியில், தமிழக அரசின் சிறப்புத் திட்டங்களான விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம், கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம், இலவச சீருடை வழங்கும் திட்டம், விலையில்லா ஆடு, மாடு வழங்கும் திட்டம், முதியோர் ஓய்வூதியம் வழங்கும் திட்டம், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம், விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம் உள்ளிட்டவை பெரிய அளவில் புகைப்படங்களாக வைக்கப்பட்டிருந்தன. 
இதில், கோட்டாட்சியர் முருகதாஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு. தனபால், வட்டாட்சியர் குணசீலி, மாவட்ட ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் பொன்வாசுகிராமன் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.